திருவொற்றியூர், ஜூலை 25 - திருவொற்றியூர், மணலி, எண்ணூர் பகுதிகளில் சிலிண்டர் வாயு பரவி துர்நாற்றம் வீசுகிறது. இதனை யடுத்து திருவொற்றியூரில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப் பரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்) நிறுவனத்தில் திங்களன்று (ஜூலை 25) மக்கள் பிரதிநிதிகள் ஆய்வு செய்த னர். திருவொற்றியூரில் கடந்த சில தினங்களாக சிலிண்டர் வாயு காற்றில் பரவி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் கண் எரிச்சல், தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பல்வேறு பிரச்னைகளால் அவதிப் பட்டு வருகின்றனர். திருவொற்றியூரில் ஐந்து இடங்களில், ‘தெர்மோ பாசினல் சாம்பிளர்’ பொருத்தி, காற்றில் அனுமதிக்கப்பட்ட அளவை விட, மாசு கலப்பு அதிகம் உள்ளதா என கண்ட றியும் முயற்சியில் ஈடுபட்டு மாதிரி களை எடுத்தனர். இதை தொடர்ந்து மணலி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தொழிற் சாலைகளில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். வாயு துர்நாற்றம் திருவொற்றியூர் மட்டுமின்றி எண்ணூர் உள்ளிட்ட பகுதி களும் பரவி வருகிறது. இதனால், மக்கள் இரவில் தூங்க முடியாமல் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் கலாநிதி வீராசாமி எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் சுதர்சனம், கே.பி.சங்கர், மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு உள்ளிட்டோர் மணலி, சி.பி.சி.எல். நிறுவனத்தில் ஆய்வு செய்தனர். வாயு துர்நாற்றத் தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள உபாதைகளை சிபிசிஎல் நிறுவன அதிகாரிகளிடம் விளக்கினர். அதற்கு, அதிகாரிகள் மழுப்பலாக பதிலளித்த னர்.