பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 5, 6வது மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி தனியார்மயமாக்கப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளியன்று (ஜூன் 30) ரிப்பன் மாளிகை வளாகத்தில், சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலர்கள் ஆர்.ஜெயராமன், எம்.சரஸ்வதி, ப.விமலா, சிஐடியு மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, செங்கொடி சங்க பொதுச்செயலாளர் பி.சீனிவாசலு, பொருளாளர் ராஜேந்திரன், துணைப் பொதுச் செயலாளர்கள் முனுசாமி, ராஜன், துணைத்தலைவர்கள் தேவராஜ், பி.சுந்தரம் உள்ளிட்டோர் பேசினர்.