districts

img

ஓசூர் நீர் நிலைகளில் கரையாத விநாயகர் சிலைகள்!

ஓசூர்,செப்.17-  விநாயகர் சதுர்த்தியையொட்டி ஓசூர் சுற்றியுள்ள பகுதிகள்,வெளி மாநிலங்களில் இருந்தும் கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் ராமநாயக்கன் மற்றும் தர்கா சந்திராம்பிகை ஏரிகளில்  கரைத்தனர்.  ஆனால், அந்த சிலைகள் இன்று வரைக்கும் கரையவில்லை. இதனால், நீர்வாழ் உயிரினங்கள், மீன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, சிலைகளை கரைப்பதற்கு அல்லது அப்புறப்படுத்தவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணி துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.