கள்ளக்குறிச்சி, ஏப்.5- குற்றவாளிகளின் கூடாரமான பாஜகவை தமிழகத்தில் தோற்கடிப் போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் கூறினார். கள்ளக்குறிச்சி நாடாளு மன்ற தொகுதி திமுக வேட்பாளர் மலையரசனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் தியாகதுருகம் பேருந்து நிறுத்தம் அருகே நடை பெற்றது. அவர் பேசிய அவர் 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 38 தொகுதி களிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது தற்போது நடைபெறவிருக்கும் தேர்த லிலும் இந்தியா கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி என்பது உறுதியுள்ளது. மிஸ்டுகால் கட்சி பிஜேபி அண்ணாமலை தமிழ்நாட்டில் மிஸ்டு கால் கொடுத்தால் பாரதிய ஜனதா கட்சியில் சேரலாம் என சொன்னார். பிறகு கொலை வழக்கு, வழிப்பறி, திருட்டு, ஆள் கடத்தல், சமூகவிரோதிகள் இப்படிப்பட்ட அனைவரும் கட்சியில் மிஸ்டுகால் கொடுத்து இணைந்து விட்டனர். தற்போது இவர்களுடன் தான் பாமக கூட்டணி வைத்துள்ளது. ஜனநாயகத்தை பாதுகாத்திடுவோம் பாரதிய ஜனதா கூட்டணிக்கு வாக்களித்தால் இதுதான் இந்தியாவின் கடைசி ஜனநாயக தேர்த லாக இருக்கும் என்ற அபா யம் உள்ளது. பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டி இந்தியாவில் நமது இந்திய கூட்டணி வெற்றி பெறச் செய்து ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் திமுக வேட்பாளர் மலையரசனுக்கு வாக்க ளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சிபிஎம் வட்டச் செய லாளர் வே.ஏழுமலை தலைமையில் நடைபெற்ற இந்தகூட்டத்தில் தி.மு.க மாவட்ட செயலாளரும் சட்ட மன்ற உறுப்பினருமான வசந்தம் க.கார்த்திகேயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் டி.எம்.ஜெய்சங்கர், தி.மு.க ஒன்றிய செயலாளர் இரா.நெடுஞ்செழியன், கே.அண்ணாதுரை, காங்கி ரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சிபிஎம் வட்டக் குழு உறுப்பினர் ஜி.அருள் தாஸ்ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.சுப்பிரமணியன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஏ.வி. ஸ்டாலின் மணி, அ.ப. பெரியசாமி, என். தன லட்சுமி, கே,வேலாயுதம், காங்கிரஸ் வட்டார தலை வர் எம்.ஏ. கொளஞ்சி யப்பன்,விசிக ஒன்றிய செயலாளர் க.கலைய முதன், மு. சின்னதுரை, சி.பி.ஐ ஒன்றிய செயலாளர் என்.இராமு மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக பங்கேற்றனர். முன்ன தாக சிபிஎம் வட்டக் குழு உறுப்பினர் பி.மணி வர வேற்றார்.