சென்னை, மே 28 -
தரமணி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் முழுநேர வகுப்புகளை நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தரமணி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக நடப்பாண்டு பொதுத்தேர்வுகளில் மாண வர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.
எனவே, பள்ளியின் கட்டு மானப் பணியை விரைந்து முடிக்க வேண்டும். சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்துவதை கைவிட்டு, தற்காலிகமாக மாற்று இடத்தில் முழு நேரம் வகுப்பு நடத்த வேண்டும் என்று பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணனை, வேளச்சேரி தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் ஜெ. எம்.எச்.ஹசன்மௌலானா, பாலர் பூங்கா தென் சென்னை மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் கே.வனஜ குமாரி, அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத் தின் வேளச்சேரி பகுதிச் செயலாளர் பி.சித்திரை செல்வி உள்ளிட்டோர் சந்தித்து மனு அளித்து பேசினர்.