districts

சென்னையில் நாளை முதல் ஹெல்மெட் அணியவேண்டும்

சென்னை, மே 21 - சென்னையில் திங்கட்  கிழமை (மே 23) முதல்   ஹெல்மெட் அணியாத வர்களை பிடிக்க சிறப்பு  தணிக்கை மேற்கொள்ளப் படும் என்று போக்குவரத்து காவல்துறை  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் சாலை  விபத்துகளில் உயிரிழப்ப வர்களின் மரணம் தொடர் பாக மாநகர போக்குவரத்து போலீசார் ஆய்வு நடதப் பட்டது, இதில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் போது ஹெல்மெட் அணியாத காரணத்தால் தலை நசுங்கி உயிரிழப்பது தெரிய வந்தது. இந்த ஆண்டு ஜனவரி 1ஆம்தேதி முதல் கடந்த 15ஆம் தேதி வரையில் ஹெல்மெட் அணியாமல் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர் என்று கணக்கு எடுக்கப்பட்டது. இதில் மோட்டார் சைக்கிள் விபத்துகளில் ஹெல்மெட் அணியாமல் சென்று 98 பேர் உயிரிழந்திருப்பதும். 841 பேர் காயம் அடைந்ததும் கண்டுப்பிடிக்கப்பட்டது. இவர்களில் 80 பேர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர்கள் என்பதும், மீதம் உள்ள 19 பேரும் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்றவர்கள் என்பதும் தெரியவந்தது. ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற 714 பேரும், பின்னால் அமர்ந்து சென்ற 127 பேரும்  காயம் அடைந்து இருக்கிறார் கள். இதனை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் செல்ப வர்கள் கட்டாயம் ஹெல் மெட் அணிய வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.