சென்னை, மார்ச் 6 - கல்வி வளாகங்களில் பாலியல் நட்புணர்வு குழுக்களை அமைக்க வேண்டுமென்று மாணவிகள் கோரியுள்ளனர். இந்திய மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட மாணவிகள் மாநாடு சனிக்கிழமையன்று (மார்ச் 6) தரமணியில் நடை பெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் காரல்மொழி கொடியேற்ற, மாவட்டக்குழு உறுப்பினர் செங்கதிர் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சங்கத்தின் மாவட்ட இணைச் செயலாளர் லாவண்யா தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டை தொடங்கி வைத்து மத்தியக்குழு உறுப்பி னர் ஆர்.ஜான்சி பேசினார். மாவட்ட துணைத் தலைவர் புகழ்செல்வி அறிக்கையை சமர்ப்பித்தார். சங்கத்தின் மாவட்டத்தலைவர் ஆனந்த், செயலாளர் ஆர். பாரதி உள்ளிட்டோர் பேசி னர். மாணவிகள் உபக்குழு மாநில ஒருங்கி ணைப்பாளர் சத்யா நிறை வுரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் அனாமிகா நன்றி கூறினார். மாணவிகள் உபக்குழு ஒருங்கிணைப்பாளராக புகழ்செல்வி தேர்வு செய்யப் பட்டார்.