districts

img

சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!

வாணியம்பாடி, ஏப்.14- திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் ஞாயிறன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.விபத்தையொட்டி  சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை ரயில்வே பொறியியல் துறையினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர் சரக்கு ரயிலின் சக்கரத்தைச் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.இதனால் பெங்களூரு மார்க்கமாகச் செல்லக்கூடிய காவேரி எக்ஸ்பிரஸ், கோயமுத்தூர் மார்க்கமாகச் செல்லக்கூடிய நீலகிரி எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால்,  ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.