districts

img

தீபாவளிக்கு முன் ரேசன் கடைகளில் இலவச அரிசி விநியோகிக்கப்படும்

புதுச்சேரி,செப்.28- தீபாவளிக்கு முன்பு ரேசன் கடைகள்  திறக்கப்பட்டு இலவச அரிசி வழங்கப் படும் புதுச்சேரி முதல்வர்  ரங்கசாமி தெரிவித்தார். புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தினவிழா கடற்கரை  சாலையில் உள்ள பழைய துறைமுக வளாகத்தில் நடைபெற்றது. துணைநிலை  ஆளுநர் கைலாஷ் நாதன் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தார்.  முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப் பேரவைத் தலைவர் செல்வம், சுற்றுலா அமைச்சர் லட்சுமி நாராயணன், சட்டமன்ற உறுப்பினர்  அனிபால் கென்னடி, தலைமை செயலாளர் சரத் சௌகான்,  வளர்ச்சி ஆணையர்  ஆசிஷ் மாதோவ்ராவ் மோரே,   சுற்றுலாத் துறை செயலாளர் ஜெயந்த குமார் ரே,   அரசுச் செயலாளர் நெடுஞ் செழியன், சுற்றுலாத் துறை இயக்குநர் முரளிதரன் உட்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.  முன்னதாக விழாவில்  துணை நிலை  ஆளுநர்  கைலாஷ் நாதன், புதுச்சேரி  யில் அமைந்துள்ள சித்தர் ஆலயங்கள், பீடங்களின் தகவல் கையேடு வெளியிட முதலமைச்சர் ரங்கசாமி  பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து சித்தர் சுற்றுலா பயண நிகழ்ச்சி ஆளுநர்  கொடிய சைத்து துவக்கி வைத்தார்.   பின்னர் முதல்வர்  ரங்கசாமி செய்தி யாளர்களிடம் கூறுகையில், புதுச்சேரி பழமையான கட்டிடங்கள் கொண்ட அழகிய  மாநிலம். சுற்றுலா பயணிகள் விரும்பி வருகின்றனர். புதுச்சேரியில்  அரவிந்தர்,  சித்தானந்த சுவாமி உட்பட சித்தர்கள் வாழ்ந்த தளமாகும். 21 கி. மீட்டருக்கு அழகிய  கடற்கரையுடன்  கூடிய பொழுதுபோக்கு நகரமாக உள்ளது என்றார். புதுச்சேரியில்  இலவச அரிசி விரைவில்  வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  இதற்கான அனுமதி பெறப்பட்டு, தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் விடப்பட உள்ளது. வரும் தீபாவளிக்குள் ரேஷன் கடைகளை திறந்து இலவச அரிசி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார்.