districts

img

பென்னாத்தூர் பேரூராட்சியில் 38 பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா

வேலூர், செப். 26 - வேலூர் மாவட்டம், பென்னாத்தூர் பேரூ ராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா தலைமையாசிரியர் உமாதேவன் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி மன்றத் தலைவர் பவானி சசிகுமார் முன்னிலை வகித்தார். கணியம்பாடி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் கஜேந்திரன் வரவேற்றார். இந்த  நிகழ்ச்சியில் பங்கேற்ற அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் ஏ.பி.நந்தகுமார் , 142 மாணவர்களுக்கு விலை யில்லா மிதிவண்டிகளை வழங்கினார். மேலும், பேரூராட்சிக்கு உட்பட்ட சப்தலிபுரம் பகுதியில்  வீடில்லாத 38 பயனாளிகளுக்கு இல வச வீட்டுமனை பட்டாக் களையும் சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் வழங்கினார். பின்னர் அவர் பேசு கையில்,இந்த பேரூராட்சி யில் உள்ள பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை, கழிவறை, சுற்றுச்சுவர்  பணிகள் செய்து கொடுக்க நபார்டு வங்கியிடம் ரூ.4 கோடி நிதி உதவி கிடைத்துள்ளது என்றார் இந்த நிகழ்ச்சியில் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிர மணியன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் மு.பாபு, முன்னாள் பேரூராட்சி தலை வரும், பள்ளி மேலாண்மைக் குழு தலைவருமான அருள்நாதன், உறுப்பி னர்கள் சசிகுமார், மீனாட்சி முரளி, வட்டாட்சியர் முரளி தரன், பேரூராட்சி உறுப்பி னர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.