districts

img

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச கண் சிகிச்சை முகாம்

அம்பத்தூர், ஜன. 4- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், மாற்றுத்திறனாளி லட்சுமி ராமசாமி, சங்கர நேத்ராலயா மருத்துவமனை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் அம்பத்தூர் வி.பி.சிந்தன் நினைவகத்தில் செவ்வாயன்று (ஜன. 4) நடை பெற்றது. வடசென்னை மாவட்டத்  தலைவர் ஆர்.ஜெயச்சந்தி ரன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கி.ராதை வரவேற்றார். முகாமை அம்பத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் துவக்கி வைத்தார். இந்த முகாமில் 90 பேர்  கலந்து கொண்டு பரிசோ தனை செய்து கொண்டனர். இதில் 67 பேருக்கு கண்ணாடி வழங்கப்படுகிறது.26 பேருக்கு கண் புரை அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் முத்து சரவணன், மேலா ளர் கண்ணன் ஆகியோர் தலைமையில் 13 பேர் கொண்ட மருத்துவக் குழு வினர் இந்த பரிசோதனையை மேற்கொண்டனர். இதில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஜீவா, மாவட்டப் பொருளாளர் ஆர்.நடராஜன், சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் சு.லெனின்சுந்தர், சிபிஎம் பகுதி செயலாளர் கோபி உள் ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.