மயிலாப்பூர் பக்கிங்காம் கால்வாய் பாலம் இடிக்கப்படுகிறது
சென்னை,ஆக.30- சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் பணி 116.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் நடை பெற்று வருகின்றன. மாத வரம் பால்பண்ணை- சிறு சேரி சிப்காட் இடையே 45.8 கிலோ மீட்டர், கலங்கரை விளக்கம் -பூந்தமல்லி பணி மனை வரை 26.1 கி.மீட்டர், மாதவரம்-சோழிங்க நல்லூர் வரை 44.6கி.மீட்டர் தூரத்துக்கு பணி கள் நடைபெற்று வரு கின்றன. இதில் 76 உயர்நிலைப்பாதை மெட்ரோ ரயில் நிலை யங்கள்,43 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலை யங்கள் அமைய உள்ளன. இதற்கான பணிகள் வேக மாக நடந்து வருகிறது. சுரங்கப்பாதை தோண்டும் பணியும் பல்வேறு இடங்க ளில் விறுவிறுப்பாக நடை பெற்று வருகின்றன. கலங்கரை விளக்கம்-பூந்த மல்லி பணிமனை மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் மயி லாப்பூர் லஸ் சந்திப்பு அருகே இரட்டை சுரங்கப் பாதையில் மிகப்பெரிய அளவில் மெட்ரோ ரயில் நிலையம் கட்டப்பட உள்ளது. இதற்காக பறக்கும் ரயில்நிலையம் எதிரே உள்ள பக்கிங்காம் கால்வாயில் உள்ள பாலம் இடித்து அகற்றப்பட உள்ளது. இதற்கான பணி விரைவில் தொடங்க இருக்கிறது.
மூதாட்டி-மகளை தாக்கி நகை, பணம் கொள்ளை
கும்மிடிப்பூண்டி,ஆக.30- கும்மிடிப்பூண்டி அடுத்த துராபள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி துர்கா. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். ரமேஷ் இரவு பணிக்கு சென்றுவிட்டார். வீட்டில் துர்கா, அவரது தாய் சாந்தா(வயது62) மற்றும் துர்காவின் 2 மகன், மகள் இருந்தனர். அவர்கள் வழக்கம்போல் இரவு சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கினர். அவர்கள் வீட்டின் கதவை பூட்டவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் நள்ளிர வில் 3 மர்ம வாலிபர்கள் திடீரென வீட்டுக்குள் புகுந்த னர். அவர்கள் பீரோவை உடைத்து 7 சவரன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளை அடித்தனர். மேலும் அங்கி ருந்து செல்லும்போது கொள்ளையர்கள் அறையில் தூங்கிக்கொண்டு இருந்த துர்க்காவின் கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த துர்கா கூச்சலிட்டார். சத்தம் கேட்டு எழுந்த மூதாட்டி சாந்தியும் அலறினார். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளை கும்பல் துர்கா மற்றும் அவரது தாய் சாந்தா ஆகியோரை தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டனர். கொள்ளையர்கள் 3 பேரும் உடல் முழுவதும் எண்ணெய் தடவி உள்ளாடை மட்டும் அணிந்து வந்து உள்ளனர். இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
சீருடை பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
கிருஷ்ணகிரி, ஆக.30- கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் 2023 ஆண்டுக்கான இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை) இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொது தேர்வு நடைபெற உள்ளது. முன்னாள் படை வீரர்களுக்கு 5 விழுக்காடு சிறப்பு இட ஒதுக்கீட்டின் படி, 120 காலிப்பணியிடங்கள் உள்ளன. விருப்பமும் தகுதியும் உள்ள முன்னாள் படைவீரர்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையவழி வாயிலாக வருகிற செப்டம்பர் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து மேலும் விவரம் பெற 04343-236134 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வேலூர்-ஆற்காடு சாலையில் வீடுகள் இடிப்பு: மக்கள் போராட்டம்
வேலூர், ஆக.30- வேலூர் சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோவில் முதல் காகிதபட்டறை டான்சி தொழிற்சாலை வரை மாநில நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் 32 வீடுகள் மற்றும் கடை கள் கட்டப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஒரு வருடமாக முயற்சி செய்து வருகின்றனர். ஒரு மாதத்திற்கு முன்பு உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆக.30 அன்று பொக்லைன் எந்திரத்துடன் காகிதப்பட்ட றைக்கு வந்தனர். பிறகு, கடைகள் மற்றும் வீடுகள் இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் அந்த பகுதி யில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மெட்ரோவில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது
அண்ணாநகர்,ஆக.30- சென்னை அமைந்தகரை செனாய் நகரை சேர்ந்தவர் சந்தோஷ் (27). பட்ட படிப்பு முடித்துள்ள இவருக்கு தனது நண்பர் மூலம் சைதாப்பேட்டை காசாகிராண்ட் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. சீனிவாசன், சந்தோஷிடம் மெட்ரோ ரயில் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்துள்ளார். இதற்கு 8 லட்சம் செலவாகும் என கூறியதை நம்பி சந்தோஷ் கடந்த 2019-ம் ஆண்டு சீனிவாசனிடம் ரூ.8 லட்சம் பணம் கொடுத்துள்ளார். இரண்டு ஆண்டுகள் ஆகியும் அவர் வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்ததால் சந்தோஷ் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு சீனிவாசன் பணத்தை திருப்பி தரமுடியாது என்று கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அமைந்தக்கரை காவல்துறையினர் செவ்வாயன்று சீனிவாசன் கைது செய்யப்பட்டார்.
காலை உணவு திட்டம் துவக்கம்
கள்ளக்குறிச்சி, ஆக.30- கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் உள்ள சின்னமனிந்தல் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் ஷேக் ஜாகிர் உசேன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்றத் தலைவர் பழனி துவக்கி வைத்தார். ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஊராட்சி ஒன்றியம் சென்னசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் 93 குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி, திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை க. லோகநாயகி, திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் ரவிச்சந்திரன், ஒன்றியக் குழுத் தலைவர் சே. வெங்கட்ராமன் ஆகியோர் உடனிருந்தனர்.
தொழில் கடன் விழா
ராணிப்பேட்டை, ஆக.30 - தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் தொழில் தொடங்குதல் மற்றும் மேம்படுத்துவதற்கான கடனுதவிகள் மற்றும் மானியங்கள் குறித்து நடைபெற்ற தொழில் கடன் விழாவை புதன்கிழமை (ஆக. 30) ராணிப்பேட்டை ஆட்சியர் ச. வளர்மதி தொடங்கி வைத்தார். தொழில் கடன் விழாவில் 6 நபர்களிடமிருந்து மொத்தமாக ரூ.10.29 கோடியில் தொழில் தொடங்க கடன் உதவி கோரி அளித்த விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டார். இதில் மாவட்ட மைய மேலாளர் ஆனந்தன், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக முதுநிலை மண்டல மேலாளர் தொழில் மைய பழனிவேல், துணை பொது மேலாளர் ரமேஷ், வேலூர் கிளை மேலாளர் ஜனார்த்தனன் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
அரசு பள்ளி கட்டிட பணி திடீர் நிறுத்தம்
செங்கல்பட்டு,ஆக.30- வல்லம் ஊராட்சியில் 60 ஆண்டுகளுக்கு மேலாக அரசு ஊராட்சி நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் மேல்நிலை மற்றும் உயர்நிலைப்படிப்புக்கு சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள செங்கல்பட்டு பகுதிக்கு சென்று வருகின்றனர். இந்த பள்ளி அருகே மலை ஈஸ்வரன் கோவில் உள்ளது. இது தொல்லியல் துறை யின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த நிலையில் இந்த பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டு புதிய கட்டிடம் கட்ட ரூ.31லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டது. இதையடுத்து பள்ளியில் உள்ள வளாகத்தில் வகுப்பறை கட்டுமான பணிகள் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு தொடங்கி நடை பெற்றது. பணிகள் முடியும் நிலை யில் பள்ளி கட்டுமான பணியை தொல்லியல் துறை திடீரென நிறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. தொல்லியல் துறையின் உரிய அனுமதி இல்லாமல் கட்டிட பணி நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியதாக தெரிகிறது. இதையடுத்து பள்ளியில் நடைபெற்ற கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.