districts

img

ஆரணியில் 100 நாள் வேலை திட்டத்தில் மோசடி

ஆரணி, மார்ச் 1- ஆரணியில் 100 நாள் வேலை திட்டத்தில் மோசடி நடந்ததாக கூறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பணியாளர்கள் முற்று கையிட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சங்கீதவாடி கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஊராட்சி செயலாளராக சுபா, பணித்தள பொறுப்பாளராக சீதா ஆகி யோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 600 பேர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 100 நாள் வேலையில் 2 பிரிவுகளாக பணி புரிந்து வருகின்றனர். மேலும் கடந்த 2 நாட்களாக பணித்தள பொறுப்பாளர் சீதா 600 நபர்களிடம் கட்டாயமாக 100 ரூபாய் அலுவலகத்திற்கு தர வேண்டும் என்றும், மறுக்கும் நபர்களுக்கு வேலை வழங்க முடியாது என்றும் வட்டார திட்ட அலுவலர் சீனிவாசன் தெரிவித்துள்ளதாக கூறி சுமார் 450க்கும் மேற்பட்டவர்களிடம் தலா 100 ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பணியாளர்கள் ஆரணி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வட்டார திட்ட வளர்ச்சி அலுவலர் சீனி வாசனிடம் புகார் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட சீனிவாசன் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆட்சியரிடம் புகார் அளிக்க உள்ளதாக 100 நாள் பணியாளர்கள் தெரிவித்தனர்.

;