districts

img

முதலை கடித்து பலி மாணவர் குடும்பத்திற்கு வனத்துறை நிவாரணம் வழங்கல்

சிதம்பரம் அருகே வேளக்குடி கிராமத்தைச் சேர்ந்த மாணவர் திருமலை (18) சனிக்கிழமை மாலை நண்பர்களுடன் பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது முதலை கடித்து பலியானார். இதையடுத்து இறந்த திருமலை குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் முதற்கட்ட நிவாரணமாக ரூ. 50 ஆயிரம் வழங்கப்பட்டது. இதில் வனத்துறை அதிகாரிகள் சுமேஷ்சோமன், பாலசுப்பிரமணியம், சிதம்பரம் வனசரக அலுவலர் சரண்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.