கிருஷ்ணகிரி,ஜன.30 - கிருஷ்ணகிரி மாவட்டம்ட, பாகலூர் அருகே பைர சந்திரம் கிராமம் அருகில் விவசாய ஒருவரது நிலத்திற்குள் புள்ளிமான் ஒன்று வந்தது. அந்த மானுக்கு காலில் அடிப்பட்டிருந்தது. இது குறித்து தகவல் அறிந்து வனச்சரக அலுவலர் பார்த்தசாரதி சம்பவத்திற்கு வந்தார். அடிப்பட்ட மானை மீட்டு கோபச்சந்திரம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கால் நடை மருத்துவர் பிரகாஷ் முதல் உதவி சிகிச்சை அளித்தார். பின்னர், வன சரக மாவட்ட அலுவலர் கார்த்திகேயினி, உயிரின காப்பாளர் செல்வி ஆகியோருக்கு தகவல் கொடுத்த னர். அவர்களது உத்தரவின் பேரில், சானமாவு காப்பு காட்டில் விட்டனர்.