districts

img

பிரேக் இல்லாத பேருந்துகளை இயக்க நிர்பந்திப்பதா? போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜூன் 13 - பிரேக் இல்லாத பேருந்துகளை இயக்க நிர்பந்திப்பதை கண்டித்து திங்களன்று (ஜூன் 13) அதிகாலை 31 பணிமனைகளில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநகர போக்குவரத்துக் கழகத்தில் சுமார் 3 ஆயிரம் பேருந்து கள் இயக்கப்படுகிறது. பேருந்துக ளின் ஆயுட் காலம் 6 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோ மீட்டர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெரும் பாலான பேருந்துகள் ஆயுட் காலத்தையும் கடந்து ஓடுகின்றன. இதனால் பேருந்துகளில் பிரேக் முழு மையாக பழுதடைந்துள்ளது. குறிப்பாக, சிவப்பு வண்ண பேருந்துகளில் தானியங்கி பிரேக்கிங் சிஸ்டம் வேலை செய்வதில்லை. பிரேக் பிரச்சனையை சரி செய்வ தற்கு உடனடியாக தானியங்கி அட்ஜெஸ்டர் எனும் ஸ்லாக் தேவைப் படுகிறது. மாதம் ஆயிரம் ஸ்லாக் நிர்வாகம் வழங்கினால்தான் பேருந்துகளில் உள்ள பிரேக்கு களை 3 மாதத்தில் சரி செய்ய முடியும்.  ஆனால் இவற்றை நிர்வாகம் வழங்கா மல் உள்ளது. பிரேக் லைனிங், பிரேக் டிரம் போன்றவற்றையும் நிர்வா கம் வழங்குவதில்லை. இதனால் பேருந்துகளை இயக்க முடியாத நிலை உள்ளது. இருப்பினும், பயணிகளின் உயிரோடு விளையாடும் வகையில் பேருந்துகளை இயக்க நிர்வாகம் நிர்பந்திக்கிறது. பேருந்தை குறிப்பிட்ட காலத்திற்கு மாற்றாமல், காலாவதியான பேருந்தில் ஏற்படும்  குறைபாடுகளுக்கு தொழிலா ளர்களை பொறுப்பாக்குகின்றனர். இதன்காரணமாக பல பேருந்துகள் இயக்க முடியாத நிலையில் உள்ளன. இதன் காரணமாக, பேருந்து இல்லை என்று ஓட்டுநர்களுக்கும், ஓட்டுநர் இல்லை என்று நடத்துநர்க ளுக்கும் பணி மறுக்கப்படுகிறது. அவ்வாறு பணி மறுக்கப்படும் தொழி லாளர்களுக்கு வருகை பதிவேடு வழங்க வேண்டும், விடுப்பு, ஆப் சென்ட் போட்டு நடவடிக்கை எடுக்க கூடாது,  சட்டப்படி பெற்று வந்த விடுப்புகளை மறுக்கக் கூடாது என  வலியுறுத்தி இந்த போராட்டம் நடை பெற்றது. இந்தப் போராட்டத்தில், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.தயானந்தம் பெரம்பூர் பணிமனை யிலும், தலைவர் ஆர்.துரை தாம்பரம்  பணிமனையிலும், பொருளாளர் ஏ.ஆர்.பாலாஜி அயனாவரம் பணி மனையிலும் கலந்து கொண்டனர்.