districts

img

விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களுக்கு பள்ளி நிர்வாகம் ரூ 30 லட்சம் இழப்பீடு

திருவள்ளூர், மே 18-

   மீஞ்சூரில் விஷவாயு தாக்கி உயிரிழந்த இரண்டு  குடும்பங்களுக்கு பள்ளி  நிர்வாகம் தலா ரூ.15 லட்சத் திற்கான காசோலையை வழங்கினர்.

   திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழனன்று (மே-18)  மீஞ்சூர் பேரூராட்சி, தனி யார் பள்ளி  கழிவுநீர் தொட்டி யில் உள்ள கழிவுகளை மே  தினத்தில் அகற்றும் போது  விஷவாயுத்தாக்கி உயி ரிழந்த இருநபர்களின் குடும்பத்தினருக்கு பள்ளி நிர்வாகத்தின் இழப்பீட்டுத் தொகையான தலா ரூ 15 லட்சம் வீதம் மொத்தம் ரூ 30  லட்சத்திற்கான வரை வோலைகளை அந்த குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கி ஆறுதல் கூறினார். உடன் கூடுதல் ஆட்சியர்  (வளர்ச்சி)  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலு வலர் செ.ஆ.ரிஷப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.