சென்னை,ஏப்.23- சென்னையில் 500க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மற்றும் மாற்றுத் திறனாளிக ளுக்கு ரூ. 20 லட்சம் மதிப்புள்ள செயற்கை உப கரணங்களை இலவசமாக வழங்கப்பட்டன. . ஆதிநாத் ஜெயின் டிரஸ்ட் சேவா கேந்திரா சார்பில் ஏற்பாடு செய் யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஷங்கர் ஜூவால் இவற்றை வழங்கி னார். செயற்கைக் கால், ஊன்றுகோல், மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, கண்ணாடி, காது கேட்கும் கருவி மற்றும் நடைப் பயிற்சி உபகரணம் உள்ளிட்டவை வழங்கப் பட்டது. இந்நிகழ்வின் போது இலவச கணினி கண் பரிசோ தனை பிரிவும் திறந்து வைக் கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய ஆதிநாத் ஜெயின் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் மனோஜ் ஜெயின், “மாற்றுத் திறனாளிகளுக்கு தன்னம் பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்ற குறிக்கோ ளுடன், எங்கள் டிரஸ்ட் கடந்த 42 ஆண்டுகளாக இது போன்ற உதவிகளை செய்து வருவதாக கூறினார்.