districts

img

மாணவர், இளைஞர் நலனுக்காக - என்.எஸ்.அசோகன்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப் படிப்புகள் 1980ல் மூடப்பட்டன மீண்டும் திறந்துவிட வலியுறுத்திம், சிதம்பரத்தில் அரசு கலைக் கல்லூரி,என்எல்சி நிறுவனம் நெய்வேலியில் கலைக் கல்லூரி தொடங்க வேண்டும் என அடுத்த மூன்றாண்டுகள் தொடர்ச்சி யாக பல கட்ட போராட்டங்களை மாணவர் சங்கம் நடத்தியதன் விளைவாக சிதம்பரத்திலும், நெய்வேலியிலும் கல்லூரிகள் துவங்கப்பட்டன அதேபோன்று சிதம்பரம் அரசு  ஐடிஐயும்மாணவர் சங்கத்தின் சாதனையே! கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் நந்தனார் விடுதியிலும், வடலூர் வள்ளலார் பள்ளி விடுதியிலும் மாணவர்கள் தாக்கப்பட்டு இறந்த பொழுது நீதிகேட்டு போர்களம் கண்டு மாணவர்கள் மத்தியில் நம்பிக்கை ஊட்டக்கூடிய இயக்கமாக இந்திய மாணவர் சங்கம் திகழ்ந்தது. மாணவர் விடுதிகள் மாட்டுத் தொழுவங்களாய் இருந்த நிலையை மாற்ற, விடுதி மாணவர் பிரச்ச னைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி 80க்கு மேற்பட்ட விடுதிகளில் அமைப்பை வலுவாக  உருவாக்கி, விடுதி மாணவர்கள் மாநில மாநா ட்டை நடத்தி தமிழ்நாட்டிற்கு வழிகாட்டியது கடலூர் மாவட்ட மாணவர் இயக்கம். விருத்தா சலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூ ரிக்கு தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதி தனியார் கட்டடத்தில் இயங்கியது. அவர்க ளுக்கு சொந்த கட்டிடம் வேண்டுமென அனைத்து சமூக மாணவர்களும் பங்கேற்ற போராட்ட த்தை நடத்தியது மாணவர் சங்கம்.

2001 ஆம் ஆண்டு அன்றைய அதிமுக அரசாங்கம் அரசு கல்லூரிகளை பல்கலைக்கழகத்தோடு இணைப்பது என்ற முடிவை எதிர்த்து இந்த மாவட்டத்தில் அறுபத்தி நான்கு நாட்கள் வீரஞ்செறிந்த போராட்டத்தை மாணவர் இயக்கம் நடத்தியது. அன்றைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மாணவர் சங்க போராட்டத்திற்கு முன்னால் பின்னடைவை சந்தித்தார். கல்வி நிலையங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிற பல்வேறு பிரச்சனைகளை தீர்த்திட இதோ மாணவர் சங்க தோழர்கள் வெள்ளை நிற கொடியை கைகளில் ஏந்தி பய ணத்தை தொடர்கின்றனர். மாணவர் இயக்க தலைவர்கள் அடுத்து வாலிபர் இயத்தின் தலை மைக்கு வந்தனர். சமூக அநீதிகளை எதிர்த்து போரிடும் ஒரு இளம் தலைமுறையை உருவாக்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மகத்தான பணியை இம்மாவட்டத்தில் செய்திருக்கிறது. கடலூர் புதுப்பாளையத்தில் கள்ளச் சாராய த்துக்கு எதிராக தொடர்ந்து போராடிய தோழர்கள் குமாரும்  - ஆனந்தும் சமூக விரோதிகள் படுகொலை செய்யப்பட்டார்கள். எனினும் வாலிபர் சங்கம் வீறு கொண்டு எழுந்தது. 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலையொட்டி  மூண்ட கலவரத்தில் தலித் மக்களின் குடிசைகளை எரிக்கப்பட்ட பொழுது ”வேண்டாம் சாதிய மோதல், வேண்டும் அனை வருக்கும் வேலை” என்ற முழக்கத்துடன் மாவட்டத்தின் ஐந்து முனைகளிலிருந்து  சைக்கிள் பிரச்சார இயக்கத்தை வாலிபர் சங்கம் முன்னெடுத்தது. தாக்குதல் தொடுத்த சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் ஒற்றுமைக்கு முன் களத்தில் நின்றது வெண் கொடியின் சாதனை.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நந்தனார் நடந்த தெற்கு வாசல் அடைக்கப்பட்டதை கண்டித்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்று திரண்டு, தெற்கு வாசலை இடிப்போம் என்ற முழக்கத்தோடு இயக்க நடத்தியதும், அக்கோயிலில் தேவாரம், திருவாசகம் பாட கூடாது என்று தீட்சிதர்கள் மறுத்தபோது எதிர்ப்பு இயக்கத்தை வாலிபர் சங்கம் முன்னின்று நடத்தியது. விருதாசலம்  பழைய பட்டினம் கிராமத்தில் தேசத் தலைவர், சட்டமேதை அம்பேத்கருக்குமாலை போட அனுமதி மறுக்கப் ்பட்ட சூழலில், நூற்றுக்கணக்கான இளைஞர் ்களை திரட்டி பழைய பட்டினம் கிராமத்திற்குள் நுழைந்து மாலை அணிவித்தது வாலிபர் சங்கம்.  நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, எந்த மாவட்ட நிர்வாகம் மறுத்ததோ, அந்த மாவட்ட நிர்வாகம் தலைமையில் முதல் மாலையை வாலிபர் சங்கம் அணிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கடலூர்  மாவட்டத்தில் இயற்கை பேரிடர்கள் வருகின்ற பொழுது குறிப்பாக சுனாமி பேரலை வந்த பொழுது  மாணவர் சங்கம் வாலிபர் சங்கமும் இணைந்து கடலோரப் பகுதிகளில் தன்னலம் கருதாமல் நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் மூன்று மாதங்கள் தங்கியிருந்து  மக்களுக்கு நம்பிக்கை யூட்டும் விதமாக பணியாற்றி னார்கள். பொங்கல் விளையாட்டு விழா மக்கள் ஒற்றுமை விழா வாக வாலிபர் சங்க கிளைகளில் நடத்தி வருகிறது. குறிப்பாக கீரப்பாளையம் ஒன்றியம் எண்ணநகரம் கிராமத்தில் தொடர்ந்து பொங்கல் விளையாட்டு விழாவை மக்கள் ஒற்றுமை விழாவாக நடைபெற்று வருகிறது. மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளுக்கு நடுவில்  மாவட்டம் முழுவதும்  ரத்த தான இயக்கம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது கடந்த நான்கு ஆண்டுகளில் ஆயிரம் யூனிட் ரத்தம் தானம் செய்துள்ளது மகத்தானது.  கோவிட் தொற்று காலத்தில் மருத்துவத்து றையோடும் நகராட்சிகளுடனும் இணைந்து மக்கள் அனைவரும் அச்சத்தில் இருந்த நேரத்தில் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதத்தில் வாலிபர் மாணவர் இயக்கம் நேரடி யாக களத்தில் பணியாற்றினார்கள். நாளைய வரலாற்றை வாலிபர் மாணவர் இயக்கங்கள் திசைவழி காட்டுகிற கருவியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அர்ப்பணிப்பு உணர்வோடு நூற்றுக்கணக்கான தோழர்கள் இன்றும் களத்தில் மக்களோடு மக்களாக, மக்களுக்கான பணியை செய்து வருகின் ்றனர். அவர்களோடு கைகோர்த்து பயணிக்க இளைஞர்களை திரட்ட திட்டமிடும் மாநாடு வடலூரில் கூடுகிறது.