சென்னை,அக்.15- பாலின நிகர் மேம்பாடு ஆய்வகத்திற்கு சிறந்த இலட்சினை (லோகோ) வடிவ மைத்து ரூ 10 ஆயிரம் பெறலாம் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்துள்ளார். உலக வங்கியின் உதவியுடன் செயல் படுத்தப்படும் “சென்னை மாநகர கூட்டமைப்பு திட்டம்” மற்றும் இந்திய அரசின் “நிர்பயா” திட்டங்களின் கீழ் இந்தியா விலேயே முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் தமிழ்நாடு அரசின் மூலம் “பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகம்” செயல்பட்டு வருகிறது. பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகமானது பல துறைகளுடன் ஒருங் கிணைந்து கூட்டு அணுகு முறையின் மூலம் நிர்பயா திட்டத்தினை கண்காணிக்கவும், அதற்கு தேவையான கொள்கைகள் மற்றும் அதற்கான விழிப்புணர்வு உருவாக்கவும், பொது இடங்கள் மற்றும் பொது போக்கு வரத்தை பெண்களுக்கு பாதுகாப்பானதாக வும் ஏற்றதாகவும் மாற்றும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பாலின நிகர் மேம்பாட்டு ஆய்வகத்திற்கு இலச்சினை (லோகோ) வடிவமைக்கும் பணி பொதுமக்களின் பங்களிப்போடு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இலச்சினை வடிவமைக்கும் போட்டி மாநகராட்சியின் சார்பில் இணைய தளத்தின் வழியாக ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. இந்த இலச்சினை உருவாக்கு வதில் அதன் தோற்றம், குறிக்கோள் மற்றும் முயற்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய வையாக இலச்சினை அமைய வேண்டும். இதுகுறித்து ஆர்வமுள்ள நபர்கள் தங்களுடைய சிறந்த திறனை பயன்படுத்தி இலச்சினையை உருவாக்கி மாநகராட்சிக்கு suggestions.gpl@gmail.com <mailto:suggestions.gpl@gmail.comG என்ற மின்னஞ்சல் முகவரியில் தங்கள் படைப்புகளை அனுப்பலாம். இந்தப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த இலச்சினைக்கு ரூ.10,000 பரிசுத் தொகை வழங்கப்படும் என மேயர் தெரிவித்துள்ளார்.