districts

பணிநீக்கம் செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு மீண்டும் பணி வழங்க சிஐடியு கோரிக்கை

திருவள்ளூர், மே 27

    தொழிற்சங்கம் அமைத்ததற்காக தொழிற்சங்க நிர்வாகிகள் 4 பேர் சட்ட விரோதமாக பணிநீக்கம் செய்யப் பட்டதை திரும்ப பெற  வலியுறுத்தி தனி யார் நிறுவனத்தை சேர்ந்த ஒட்டு மொத்த தொழிலாளர்களும் 38 வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

   திருவள்ளூர் மாவட்டம், பூந்த மல்லி அருகில் உள்ள நேமம் என்ற பகுதியில் தென்கொரியாவை சேர்ந்த லோட்டே சாக்கோ பை என்ற சாக்லேட் தொழிற்சாலை நீண்ட கால மாக இயங்கி வருகிறது. இந்த நிறு வனத்தில் 60 கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் கடந்த 13 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்ற னர்.

   இந்த நிலையில் கடந்த ஜன வரி மாதம் தொழிற்சங்கம் அமைத்த னர். சங்கம் அமைத்த ஒரே காரணத் திற்காக,  ஆலைக்கு வெளியே நடக்காத ஒரு சம்பவத்தை  குற்றச் சாட்டாக வைத்து சங்கத்தின் தலை வர், செயலாளர் உள்ளிட்ட நிர்வாகி கள் 4 பேரை ஏப்ரல்  20ஆம் தேதி முதல் நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது.  நிர்வாகத்தின் இந்த நட வடிக்கையை எதிர்த்து 60 நிரந்தர தொழிலாளிகளில் 57 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    38 நாட்களாக நடைபெறும் இந்த வேலைநிறுத்த போராட்டத்தை தீர்வு காண்பதற்கு நிர்வாகம் முன் வரவில்லை.  தொழிலாளர் துணை ஆணையர் முன்பு  பேச்சுவார்த்தை நிலுவையில் இருக்கும் போது,  இது போன்ற எந்த பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று தொழிலாளர் துறை துணை ஆணையர் அறிவுறுத்தியுள்ளனர். தொழிற்சங்கம் அமைத்த  அந்த 4 தலைவர்களையும் சஸ்பெண்ட் செய்தது செய்ததுதான் என்று பிடிவாத மான  ஒரு நிலைபாட்டை நிர்வாகம் எடுத்திருக்கிறது.

   அனைத்து நிரந்தர தொழிலாளிகளும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும்போது  நிர்வாகம் சட்டவிரோதமான முறை யில் உற்பத்தி செய்கிறது. தேசிய அப்ரண்டிஸ் மற்றும் ஒப்பந்த தொழி லாளிகளை வைத்து இந்த உற்பத்தி யில் ஈடுபடுகிறது. இதற்கு எதிராக தொழிற்சாலை அதிகாரியிடம் புகார் தெரிவித்த போது ஒரு வாரத்திற்கு பிறகுதான் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பிறகும் வெளிப்படையாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதனை தெரிவிக்க மறுக்கின்றனர்.

     இந்த பின்னணியில் துணை ஆணையர் முன்னிலையில் நடை பெற்ற பேச்சு வார்த்தையில் சுமூகத் தீர்வு ஏற்படாத காரணத்தினால் தொழி லாளர் துறை இணை ஆணையர் முன்பாக பேச்சு நடத்துவது என்று இப்போது முடிவாகியுள்ளது.

   போராட்டத்தை உடைப்பதற்கு வேறு வகைகளில் நிர்வாகம் முயற்சிக்கிறது. தமிழ்நாடு அரசும் தொழிலாளர் துறையும் இப்பகுதி யில் தொழில் அமைதி ஏற்பட தொழிற்சங்க உரிமைகளை உறுதி செய்வதும் தொழிற்சங்க தலை வர்கள் மீதான  சட்ட விரோத பழி வாங்க நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவும் விரைவாக தலை யிட வேண்டும் என சிஐடியு திரு வள்ளூர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் இ.முத்துகுமார் ஆகியோர்  ஓர் அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளனர்.