சென்னை, ஜூன்29-
சேலம் மாவட்டத்தில் ஆதி திராவிடர் நல வாரியம் பணியாற்றிய சமையல் ஊழியர்களுக்கு 6 ஆண்டுக ளாக சம்பளம் வழங்காத சிறப்பு தாசில்தாருக்கு 2 ஆண்டு கள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள ஆதி திரா விடர் நல வாரியத்தில் சமையல்காரராக மூர்த்தி என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 2017 டிசம்பர் 1 ஆம் தேதி முதல் சம்பளம் வழங்கப்படவில்லை.
இதையடுத்து, தனது சம்பள பணத்தை வழங்குமாறு ஆதி திராவிடர் நலத் துறைக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதி மன்றத்தில் மூர்த்தி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதி மன்றம், மூர்த்திக்கு சம்பளம் வழங்குமாறு கடந்த 2020 செப்டம்பரில் உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவை சேலம் மாவட்ட ஆதி திராவிடல் நல வாரிய அதிகாரி அமல்படுத்தவில்லை. இதைத் தொடர்ந்து, அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு மீண்டும் 2022 இல் விசாரணைக்கு வந்தபோது 3 வாரங்களில் பணத்தை தருவதாக தெரிவித்ததையடுத்து வழக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், நீதிபதி பிறப்பித்த உத்தர வில், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தா ததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகுமாறு தாசில்தாருக்கு சட்டபூர்வ நோட்டீஸ் வழங்கப்பட்டது.
வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தான் வேறு இடத்துக்கு மாற்றப் பட்டதாக சிறப்பு தாசில்தார் தெரிவித்தார். உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு ஓர் ஆண்டு காலம் அவர் சேலம் சிறப்பு தாசில் தாராகவே அவர் பணியாற்றியுள்ளார்.
தொடர்ந்து நீதிமன்றத்திற்கு அவர் தவறான தகவல்களை தந்து நீதிமன்றத்தின் விசாரணையை மாற்ற முயன்றுள்ளார். பாதிக்கப்பட்டவருக்கு ஒரு ரூபாய் கூட வழங்க சிறப்பு தாசில்தார் முயற்சி செய்ய வில்லை. எனவே, அவரது வாதத்தை நீதிமன்றம் ஏற்க முடியாது.
பாதிக்கப்பட்டவருக்கு சம்பளம் வழங்காமல் இருந்தால் அவரது வாழ்வா தாரம் என்னாவது? அவரது குழந்தைகளின் படிப்பு, குடும்ப நிலையை எப்படி சமாளிப் பார்? இது அரசியலமைப்பில் தரப்பட்டுள்ள வாழ்வாதார உரிமைக்கு எதிரானது. சிறப்பு தாசில்தார் நீதிமன்றத்தில் தனது தவறுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதையும் ஏற்க முடியாது.
எனவே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறப்பு தாசில்தார் ஜாஹீர் உசேனுக்கு 2 ஆண்டுகள் சாதாரண சிறை தண்டனை யும் ரூ 2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படு கிறது.
அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும். உடனடியாக அவர் உயர் நீதி மன்ற பதிவாளர் முன்பு ஆஜராகவேண்டும். அதன் மீது பதிவாளர் உரிய நடவடிக் கையை எடுக்க வேண்டும். நீதிமன்றத்திற்கு தவறான தகவல்களை தந்துள்ள சிறப்பு தாசில்தார் மீது உயர் நீதிமன்ற பதிவாளர் குற்ற நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.