districts

img

170 கிலோ எடை கொண்ட நோயாளிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை

சென்னை, மே 11–

     சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் ஹெல்த் சிட்டி  மருத்துவமனை இந்தியாவில் முதல் முறையாக உயிருடன் உள்ள நன்கொடையாளரின் கல்லீரலின் ஒரு பகுதியைப் பெற்று 170 கிலோ எடை கொண்ட  நோயாளிக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.

    புதுச்சேரியை சேர்ந்த 50 வயதான தொழில் அதிபர் ஒருவர் சிறு வயது முதலே உடல் பருமன் காரணமாக அவதிப்பட்டு வந்ததோடு, நீரிழிவு, ரத்த அழுத்தம் மற்றும் கல்லீரல் கொழுப்பு நோய் உள்ளிட்ட  பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் அவரது உடல் நிலை மோசமடைந் தது. இதன் காரணமாக இறந்தவர்களின் கல்லீரலைப் பெற்று அறுவை சிகிச்சை என்பது சாத்தியமில்லை என்பதால்  கல்லூரி மாணவரான அவரது மருமகன் தனது கல்லீ ரலை தானம் செய்ய முன்வந்தார்.  

  நன்கொடையாளரிடமிருந்து பகுதி யளவு கல்லீரலை எடுத்து கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் கணைய - பித்த அறுவை சிகிச்சை இயக்குநர் டாக்டர் மெட்டு ஸ்ரீனிவாஸ் ரெட்டி தலைமையிலான அறுவை சிகிச்சைகுழுவினர் வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை செய்துமுடித்தனர்.

   இது குறித்து மருத்துவர்கள் கூறுகை யில், தற்போது அந்த நோயாளிக்கு அறுவை  சிகிச்சை முடிந்து மூன்று மாதங்கள் ஆகிறது. புதிய கல்லீரல் அவருக்கு நன்றாக வேலை செய்கிறது. இதன் காரணமாக அவரது உடலில் தற்போது தேவையற்ற நீர் நன்கு குறைந்துள்ளது. அவர் மருத்துவமனையில் இருந்து விடு திரும்பும்போது உடல் எடை 130 கிலோவாக குறைந்திருந்தது என்றார்.