districts

வியாசர்பாடி கணேசபுரத்தில் மேம்பாலம்: மாமன்ற கூட்டத்தில் ஒப்புதல்

சென்னை, ஜூலை 30 - சென்னை மாநகராட்சிக்குள் 5 இடங்களில் காற்று தர தொடர் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் சனிக்கிழமையன்று (ஜூலை 30) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், வியாசர்பாடி கணேச புரத்தில் சுங்கப்பாதைக்கு மாற்றாக 142 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும்,தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சிஐடி நகர் பிரதான சாலையில் 131 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மேம்பாலம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மணலியில் 101 கோடி ரூபாய், ஆதம்பாக்கத்தில் 5 கோடி ரூபாய்  செலவில் புதிய பாலமும், கீழ்ப்பாக்கம்  கார்டன் சாலையில் உள்ள பாலம் 6.20 கோடி ரூபாய் செலவில் புதுப் பித்தும் கட்டவும் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.