districts

img

செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி மக்கள் வரவேற்பு

சென்னை,ஜூன் 5-

    கலைஞர் நூற்றாண்டை யொட்டி சென்னையில் உள்ள செம்மொழி பூங்கா மலர் கண்காட்சியை ஏராள மாக மக்கள் கண்டுகளித்த னர்.

    சென்னையில் நடந்து வரும் மலர் கண்காட்சிக்கு கிருஷ்ணகிரி, கொடைக் கானல், கன்னியாகுமரி, மதுரை மலர்கள்  பயன்படுத் தப்பட்டுள்ளது. இரண்டரை லட்சம் கொய் மலர்கள், 250  கிலோ உதிரி பூக்களால் தேர்,  யானை மற்றும் பல்வேறு வடிவங்களில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 5 வயதுக்குட்பட்ட குழந்தை களுக்கு அனுமதி இலவசம்.  5 முதல் 10 வயதுக்குட்பட்ட வர்களுக்கு ரூ.20-ம், பெரியவர்களுக்கு ரூ.50-ம் வசூலிக்கப்படுகிறது. காலை 9 மணி முதல் இரவு 8 மணிவரை கண்காட்சியை பார்வையிடலாம். கண் காட்சியில் தத்ரூபமாக கைத்தறி நெசவு செய்வது போன்றும், குயவர், வடை  சுடுவது, அப்பளம் சுடுவது,  வண்ணத்து பூச்சி வடிவங் கள், மயில், திண்பண்ட கடை கள், மலர்களிலே உரு வான மாட்டு வண்டி, நகை  பட்டறை, பிரமாண்ட அலங் கார வளைவு ஆகியவை முற்றிலும் காய்கறி, பழங்கள், மலர்களால் உரு வாக்கப்பட்டது பார்வை யாளர்களை மெய் சிலிர்க்க  வைக்கும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.