சென்னை, ஜன. 13 - ஃபோர்டிஸ் மலர் மருத்து வமனையில் பணியாற்றும் அனைவரையும் நிரந்தரம் செய்ய வேண்டும் என்று ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஃபோர்டிஸ் மலர் மருத்து வமனை ஊழியர் சங்கத் தின் 8ஆவது மாநாடு புதனன்று (ஜன.12) தரமணியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் தலைவர் எஸ்.ராஜப்பா தலைமை தாங்கினார். வரவேற்பு குழு தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி வர வேற்றார். விவசாய சங்கத்தின் துணைப் பொதுச் செயலா ளர் துளசி நாராயணன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மக்கள் நல்வாழ்வுக்கான மருத்து வர்கள் சங்கத்தின் செயலா ளர் டாக்டர் காசி கருத்து ரையாற்றினார். சங்கப்பணி அறிக்கையை பொதுச்செய லாளர் ஐ.ஆர்.ரவியும், வரவு, செலவு அறிக்கையை பொருளாளர் கே.சி.மோகன் சிங்கும் சமர்ப்பித்தனர். ஊழியர்களுக்கு கொரோனா கால ஊக்கத் தொகை வழங்க வேண்டும், இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பணிக்கால விருதை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. சங்கத்தின் கவுரவத் தலைவராக எஸ்.ராஜப்பா வும், செயல் தலைவராக எம்.இன்பரசியும், பொதுச் செயலாளராக ஐ.ஆர்.ரவியும், பொருளாளராக கே.சி. மோகன் சிங்கும் தேர்வு செய்யப்பட்டனர்.