districts

img

திடீர் நகர் மக்களுக்கு அதே இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு வாரிய தலைவரிடம் சிபிஎம் தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 18 - ஓட்டேரி திடீர் நகர் மக்களுக்கு அதே இடத்தில் அடுக்குமாடி குடி யிருப்பு கட்டித்தர வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரி யத்தின் மேலாண்மை இயக்குநர் கோவிந்தராவை திங்களன்று (ஜூலை 18) கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா மனு அளித்து பேசி னார். அந்த மனுவின் சுருக்கம் வரு மாறு: எழும்பூர் தொகுதி 99வது வட்டம் பிரிக்லின் சாலை, ஓட்டேரி சுடு காட்டையொட்டி 1949ஆம் ஆண்டு நில எடுப்பு சட்டத்தின் கீழ் சுமார் 35 கிரவுண்ட் நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்தியது. இவ்விடத்தில் 1977ஆம் ஆண்டு குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 98 குடும்பங்க ளுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரி யம் மனைகளை ஒதுக்கியது. திடீர் நகர் என்றழைக்கப்படும் அப்பகுதி யில் தற்போது 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிக்கு முறையான குடிநீர், கழிவுநீர் வசதிகள் செய்து கொடுக்கப்படாததால் சுகாதார சீர்கேடுகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சி பொதுக் கழிப்பிடம் மற்றும் திறந்தவெளி பகுதிகளைதான் ஒட்டுமொத்த மக்களும் கழிப்பிட தேவைக்கு பயன்படுத்த வேண்டிய அவல நிலையில் உள்ளது. 2001-2006 காலகட்டத்தில் இங்கி ருந்த குடிசைகள் தீப்பிடிக்காத சிமெண்ட் ஓடுகள் கொண்ட வீடுக ளாக மாற்றப்பட்டன. இங்கு வசித்து வரும் மக்கள் அனை வரும் பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த கூலித் தொழிலாளிகள். எனவே, இங்குள்ள மக்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அடுக்கு மாடி குடியிருப்பை கட்டிக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் போது கட்சியின் எழும்பூர் பகுதிச் செயலாளர் கே.முரு கன், பகுதி குழு உறுப்பினர் புக ழேந்தி, திடீர் நகர் கிளைச் செய லாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.