districts

img

பெரணமல்லூர் சேகரனின் நாவலுக்கு முதற் பரிசு

திருவண்ணாமலை, ஏப்.1-  தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட பனுவல் நூல் போட்டியில் 2023 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நாவல்களில் முதல்  பரிசினை திருவண்ணா மலை மாவட்டம், பெரண மல்லூர் சேகரன் எழுதிய ‘வன்ம மேகம் கலையும் போது’ எனும் நாவல் வென்றது. திருவள்ளுவர் உலக சாதனையாளர் அமைப்பு, களரி கலை இலக்கியக் களம் மற்றும்‌ யாழ் கவி முற்றம் சார்பில் நடை பெற்ற இந்த போட்டியின் பரிசளிப்பு விழா புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. விழாவில் மாவட்ட உரிமை யியல் நீதிமன்ற நீதிபதி  கீதா பரிசினை வழங்க,  எழுத்தாளர் பெரணமல்லூர் சேகரன் பெற்றுக் கொண் டார். புதுவை தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் முத்து வாழ்த்துரை வழங்கினார்.