districts

தாம்பரம் மாநகராட்சி முதல் கூட்டம்

சென்னை, ஏப். 11 - தாம்பரம் மாநகராட்சி யின் முதல் கூட்டம் திங்க ளன்று (ஏப். 11) நடை பெற்றது. இந்த மாமன்ற கூட்டத் திற்கு மேயர் வசந்த குமாரி தலைமை தாங்கி னார். துணை மேயர் கோ. காமராஜ், தேர்ந்தெடுக்கப் பட்ட மாமன்ற உறுப்பினர் கள், ஆணையர் இளங்கோ உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் தாம்பரம் நகராட்சியை, மாநகராட்சியாக நிலை உயர்த்தி தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து கூட்ட  அரங்கிலிருந்து பத்திரிகை யாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அரங்கிற்கு வெளியே நின்று செய்தி சேகரித்த செய்தி யாளர்களை சிலர் அவதூ றாக பேசியதைத் தொடர்ந்து சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அதன்பின் கூட்டத்தில், 17 அவசர தீர்மானங்களும், 171 தீர்மானங்களும் நிறை வேற்றப்பட்டதாக தெரி கிறது. சொத்து வரி உயர்வை கண்டித்தும், தாம்பரம் மார்க்கெட் வியா பாரிகள் கடைகள் அகற்றபடு வதற்கு எதிர்ப்பு தெரிவித் தும் அதிமுகவினர் கூட்டத் திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.