districts

img

விவசாய  தியாகிகளுக்குசூளகிரி வட்டம் உத்தனப்பள்ளியில்  முதலாம் ஆண்டு அஞ்சலி

மோடி அரசின் விவசாயிகளுக்கு எதிரான மசோதாவை திரும்ப பெற கோரி தில்லியில் நடைபெற்ற விவசாயிகளின் ஓராண்டு கால வீரம் செறிந்த போராட்டத்தின் போது கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட லக்கம்பூர் விவசாய  தியாகிகளுக்குசூளகிரி வட்டம் உத்தனப்பள்ளியில்  முதலாம் ஆண்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் எம்.எம்.ராஜூ தலைமை தாங்கினார். தலைவர் முருகேஷ், செயலாளர் பிரகாஷ், வட்டத் தலைவர் வேலு, மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் எஸ்.முனியப்பா,  தளி ஒன்றிய பொருளாளர் அனுப்பா. வாலிபர் சங்க செயலாளர் இளவரசன், தலைவர் முருகன் கலந்து கொண்டனர்.

;