மாமல்லபுரம் ஜூலை 18-
செங்கல்பட்டு மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் அலுவலர் ராஜேஷ் கண்ணன் மேற்பார் வையில் மாமல்லபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தீ தடுப்பு விழிப் புணர்வு ஒத்திகை நடத்தப்பட்டது.
திடீரென தீ பிடித்தால் பதட்டம் இன்றி எப்படி அணைப்பது, மேலும் பரவாமல் தடுப்பது, தீ காயம் ஏற்பட்டால் முதலு தவி சிகிச்சை முறைகள் என்ன? தகவல்களை எப்படி பரிமாற வேண்டும், என்பவை குறித்த பயிற்சியை தீயணைப்பு அலுவலர்கள் மாணவர்களுக்கு செய்து காண்பித்தனர்.