காஞ்சிபுரத்தை சேர்ந்த இளையராஜா-கிரிஜா தம்பதியின் மகன்கள் கணேஷ்குமார்,டிவேஷ் ஆகியோர் வயநாடு மக்களுக்கு உதவுவதற்காக தாங்கள் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணம் ரூ.1810 ஐசிபிஎம் கட்சியின் மாவட்ட செயலாளர் சி.சங்கரிடம் வழங்கினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே நேரு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி சிவப்பிரகாசம், ஸ்ரீ மகேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இரண்டு குழந்தைகளையும் கட்சித் தலைவர்கள் பாராட்டினர்.