districts

img

மின்சார வாரிய காலி பணியிடங்களை நிரப்பிடுக

சென்னை, ஏப். 16- மின்சார வாரியாத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு பவர் இன்ஜினியரிங் அசோசி யேஷன் (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் மேற்கு கிளை 9ஆம் ஆண்டு பேரவை அம்பத்தூரில் பி.எஸ்.பார்த்த சாரதி தலைமையில் நடைபெற்றது. ராஜேஷ் கண்ணன் அஞ்சலி தீர்மானத்தை வாசித் தார். மாநில பொதுச் செயலாளர் கே.அருள் செல்வன் பேரவையை துவக்கி வைத்து பேசி னார். செயலாளர் பி.எஸ்.பார்த்தசாரதி செய லாளர் அறிக்கையையும், பொருளாளர் வி.அருள் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மின் ஊழியர் மத்திய அமைப்பின் மேற்கு கிளைத் தலைவர் தசர தன், செயலாளர் எஸ்.எஸ்.கணேஷ்ராவ் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.ரவிச்சந்திரன் பேரவையை நிறைவு செய்து பேசினார்.

தீர்மானங்கள்

சிபிஎஸ் திட்டத்தின் கீழ் பணியாற்றும் அனைவருக்கும் சிபிஎஸ் கணக்கு சீட்டு வழங்க வேண்டும், தரமான தளவாடப் பொருட்களை தங்கு தடையின்றி வழங்க வேண்டும், மின்வாரியத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், மின்சார சட்டம் 2021ஐ கைவிட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மின்சார வாரி யத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப  வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள்

தலைவராக பி.எஸ்.பார்த்தசாரதி, செயலாளராக ரா.ராஜேஷ் கண்ணன், பொரு ளாளராக வி.அருள் உள்ளிட்ட 15 பேர் தேர்வு  செய்யப்பட்டனர்.