districts

img

52 ஆயிரம் பணியிடங்களை நிரப்பிடுக! மின் ஊழியர் மாநாட்டில் வலியுறுத்தல்

விழுப்புரம், ஜூலை 24 - மின்வாரியத்தில் காலியாக உள்ள 52 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டு மென்று தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தி உள்ளது. மத்திய அமைப்பின் விழுப்புரம் திட்ட 16வது மாநாடு ஞாயிறன்று (ஜூலை 24) நடை பெற்றது. இந்த மாநாட்டில், மின்துறையை பொது துறையாக பாதுகாக்க வேண்டும், 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து பேசி முடிக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதி படி பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக 380 ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்களை நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில், மாநில துணைத்தலைவர் கே.அம்பிகாபதி தலைமை தாங்கினார், திட்ட துணைத்தலைவர் எம்.புரு ஷோத்தமன் செங்கொடியை ஏற்றினார். திட்ட இணைச்செயலாளர் பி.சிவசங்கரன் வரவேற்றார். அஞ்சலி தீர்மானத்தை வி.கே.ஏழுமலை வாசித்தார். மாநில துணைப் பொதுச் செயலாளர் டி.பழனிவேல் தொடக்கவுரை ஆற்றினார். வேலை அறிக்கையை திட்டச் செயலாளர் ஆர்.சேகரும், வரவு-செலவு அறிக்கையை பொருளாளர் ஆர்.அருளும் சமர்ப்பித்தனர். மண்டல செயலாளர் ஆர்.சிவராஜ், சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.முத்துக் குமரன், செயலாளர் ஆர்.மூர்த்தி, பொரு ளாளர் வி.பாலகிருஷ்ணன், துணைத் தலைவர்கள் பி.குமார், தங்க.அன்பழகன், எஸ்.அய்யப்பன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.ரவிச்சந்திரன் நிறையுரையாற்றினார். டி.பார்த்திபன் நன்றி கூறினார்.   திட்ட சிறப்பு தலைவராக பி. சிவ சங்கரன், தலைவராக கே.அம்பிகாபதி, செயலாளராக ஆர்.சேகர், பொருளாளராக வி.கே.ஏழுமலை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.