districts

img

சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் அத்திப்பட்டு வானகரம் சாலை

அம்பத்தூர், டிச. 4- அம்பேத்கர் சிலையில் இருந்து வானகரன் செல்லும் சாலையில் அத்திப்பட்டு கலைவாணர் நகர் அருகே குப்பைக் கிடங்கு உள்ளது. இங்கு அம்பத்தூர் மண்டலத்திற்குட்பட்ட 15 வார்டுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்பட்டு, பின்னர் இங்கிருந்து கொடுங்கையூர் குப்பைக் கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த குப்பைக் கிடங்கை சுற்றி 10க்கும் மேற்பட்ட சிறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. மேலும் அத்திப்பட்டு சின்ன காலனி, பெரிய காலனி, மேட்டுத் தெரு, கலைவாணர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.  இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் அம்பத்தூர் செல்ல  இந்த வானகரம் சாலை வழியைத்தான் பயன்படுத்தவேண்டும். தற்போது குப்பைக் கிடங்கில் இருந்து வெளியேறும் கழிவுநீர்  தேங்கி நிற்பதால், சாலை சேதமடைந்து சேறும் சகதியுமாக மாறிவிட்டது.  இதனால் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களும், வேலைக்கு செல்வோர், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். அந்த தண்ணீரில் நடந்து சென்றால் கால்களில் அரிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். உடனடியாக குப்பைக் கிடங்கில் இருந்து வெளியேறும் கழிவு நீரை தடுக்கவும், சாலையை சீரமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.