districts

இலங்கைக்கு விரைவில் படகு சேவை எ.வ.வேலு தகவல்

சென்னை, ஆக.20-

      வெளியுறவு அமைச்சகம் பச்சைக்கொடி காட்டியுள்ளது இந்தியா - இலங்கை இடையே விரைவில் படகு சேவை தொடங்க நாகப்பட்டினம் துறைமுகம் தயாராகி வருகிறது என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

    குஜராத் மாநிலம் கெவடியாவில் 19-வது  கடலோர மாநிலங்கள்மேம்பாட்டுக் குழுமக்  கூட்டம் நடந்தது. ஒன்றிய அரசின் துறை முகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் தலைமையில் நடந்த கூட்டத் தில் கடலோர மாநிலங்களின் துறைமுக அமைச்சர்கள், ஒன்றிய, மாநில அரசுகளின் அலுவலர்கள், கடல்சார் வாரியம் அலுவலர்கள் பங்கேற்றனர்.

     தமிழ்நாடு சார்பில் இக் கூட்டத்தில் பங்கேற்ற பொது பணிகள், நெடுஞ்சாலை கள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

    கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியில் நுழைவாயிலுடன் கூடிய தனித்துவமான கடற்கரையை கொண்டுள்ளது. அதன் கடல்சார் மற்றும் துறைமுகத் துறையை வலுப்படுத்த உறுதி பூண்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் சாகர்மாலா திட்டத்தின் கீழ், மானியம் தமிழ்நாடு கடல்சார் வாரியத் துக்கு ரூ.120 கோடி நிதியுதவி அளித்துள் ளது.

    இந்தியாவை சர்வதேச அளவில் இணைக்கும் வகையில் இலங்கைக்கு தொடங்கவுள்ள முதன்மையான படகு சேவைக்கு வெளியுறவு அமைச்சகம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. இது நாடு களுக்கிடையே உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகளின் போக்கு வரத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வர்த்தகத்தையும் மேம்படுத்தும்.

    இப்படகு சேவையை விரைவில் தொடங்குவதற்கு நாகப்பட்டினம் துறைமு கம் தயாராகி வருகிறது. ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே படகு சேவையை புதுப்பிப்பதற்கான ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 1980 ஆம் ஆண்டு வரை செயல் பாட்டில் இருந்த இந்தியா - இலங்கை இடையிலான பாரம்பரிய கடல்வழி களை புதுப்பிக்கும் வகையில் இத்திட்டம் இருக்கும்.

   கடலோர கடல் வளங்களை பாது காப்பது நமது பொறுப்பும், கடமையும் ஆகும். தமிழ்நாட்டின் மத்தியில் உள்ள  தொழிற்சாலை பகுதிகளில் தேவையான சரக்குகள் கையாளக் கூடிய வகையில், கடலூர் பகுதியில் பெரும் திறன் கொண்ட  பசுமை வளத் துறைமுகத்தை உருவாக்க வும், தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஆண்டொன்றுக்கு 10 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை இத்துறைமுகம் கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

   இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத் துறை செயலாளர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு கடல்சார் வாரியம் தலைமை நிர்வாக அலுவலர் சி.நடராஜன், மாநில துறைமுக அலுவலர் எம்.அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.