districts

img

பெண்ணியம் என்பது ஆண்களுக்கு எதிரானது அல்ல: கீதா ரவிச்சந்திரன்

சென்னை, மார்ச் 11- பெண்ணியம் என்பது ஆண்களுக்கு எதிரானது அல்ல என வருமான வரித் துறை முதன்மை தலைமை  ஆணையர் கீதா ரவிச்சந்தி ரன் தெரிவித்தார். சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் (பிஐபி)  மற்றும் மண்டல  மக்கள் தொடர்பு அலுவல கம் சார்பில் நடந்த மகளிர்  தின விழா வில் அவர்  பேசுகையில், தன்னம் பிக்கை மட்டுமே பெண் களை முன்னேற்றும் என்றார்.  தாயாகிய பெண் மட்டுமே  குடும்பத்தின் பாரத்தை சுமக்கிறார், அவர்தான் குடும்பத்தை வழிநடத்து கிறார். பெரும்பாலான குடும்பத்தில் அம்மாதான் முதுகெலும்பு என்று தெரி வித்த அவர், பெண்ணியம் என்பது ஆண்களுக்கு எதிரா னது அல்ல என்று வலியுறுத் தினார். திரைப்பட நடிகர் சந்தோஷ் பிரதாப் பேசுகை யில், பெண்கள் முன்னேற் றத்தை விரும்புவதால்தான், தனது படங்களில் நடிகை களுக்கு முக்கியத்துவம் தருவதாகக் கூறினார். ஆண் களை விட பெண்களுக்கே சக்தி அதிகம் என்றார். தொடர்ந்து கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. சென்னை பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநர் மா.அண்ணாதுரை வாழ்த்தி பேசினார். இயக்குனர் குருபாபு பலராமன் நன்றி கூறினார்.மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இயக்கு நர் காமராஜ் உள்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.