districts

பெண் தற்கொலை சாராட்சியர் விசாரணை

கிருஷ்ணகிரி, ஆக.14-

     கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள திருமழிகை கிராமம். இந்த கிரா மத்தை சேர்ந்தவர் முத்துலட்சுமிக்கு 3 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆண் குழந்தை உள்ளது.

     கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப  தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முத்துலட்சுமி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முத்துலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  

   இதுகுறித்து தளி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். திருமணமான 3 ஆண்டுகளில் பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஓசூர்  சாராட்சியர் சரண்யா விசாரணை நடத்தி வருகிறார்.