திருவண்ணாமலை, ஜூலை. 22- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.கே.வெங்கடேசன் தலைமை தாங்கினார், விவ சாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் பி. துளசி நாராயணன், மாவட்ட நிர்வாகிகள் உதயகுமார், அருண்குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். காட்டுப்பன்றிகளை அழிக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாய நிலங்களுக்குள் வனவிலங்குள் நுழைந்து சேதப்படுத்துவதை தடுக்க மின்வேலி அமைக்கவேண்டும். வனவிலங்குகளால் நாசமாகும் பயிர்களுக்கு தாமதம் இன்றி உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும், வனவிலங்குகளால் ஏற்படும் உயிரி ழப்புக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில் சிபிஎம் மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார், சிஐடியு நிர்வாகிகள் இரா.பாரி, எம்.வீரபத்திரன், நிர்வாகிகள் எம்.பிரகலநாதன், எ.லட்சுமணன், கே.கே.வெங்கடேசன், ஜி.பன்னீர்செல்வம், ரஜினி ஏழுமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.