districts

img

கூட்டுறவு அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை

திருவண்ணாமலை, அக்.13- திருவண்ணாமலை தாலுக்கா கருந்துவாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த கோடீஸ்வரன். மல்லவாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டில் பயிர் கடன் வாங்கினார். இந்த கடனை 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தள்ளுபடி செய்தது.  மீண்டும், 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் விவசாயிகள் பயிர் கடன் தள்ளுபடி செய்ய மாநில அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால் இதுவரை கடனை தள்ளுபடி செய்யவில்லை. இதுகுறித்து பலமுறை கூட்டுறவு துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எடுக்கவில்லை. இந்த நிலையில், மாவட்ட கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளரை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர்கள் சந்திப்பதற்கு சென்றனர். ஆனால், அலுவலகத்தில் இருந்து கொண்டே, வெளியில் சென்று உள்ளதாக ஊழியர்கள் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, விவசாயிகள் அந்த அலுவலகத்தை முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி. கே. வெங்கடேசன், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதன் பிறகு வெளியில் வந்த கூடுதல் பதிவாளர், விவசாயிகள் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.