districts

img

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் கலந்து வேண்டும் பொன்னேரியில் விவசாயிகள் போராட்டம்

திருவள்ளுர்,அக் 14- விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் துறை அதிகாரிகள் கலந்து கொள்ள வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. பொன்னேரியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்  வெள்ளியன்று (அக் 14) நடைபெற்றது. இதில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி சுற்று வட்டார விவசாயிகள் கலந்து கொண்டனர். ஆனால் கூட்டத்தில் சம்மந்தப்பட்ட வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட முக்கிய துறை களின் அலுவலர்கள் கலந்து கொள்ளவில்லை. விவசாயிகள் நலன் காக்கும் கூட்டங்களில் தொடர்ந்து அலுவலர்கள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்து வருகின்ற னர். எனவே முக்கிய முடிவெடுக்கும் அதிகாரி கள் கூட்டத்தில் கலந்துக் கொள்ள வேண்டும் எனக் கூறி கூட்டத்தை புறக்கணித்து கோட்டாட்சியர் அலுவல கம் முன்பு தர்ணா போராட்ட த்தில் ஈடுபட்டனர். அப்போது கோட்டாட்சி யர் அலுவலக நேர்முக உதவியாளர் அனைத்து துறை அலுவலர்களுக்கும் தகவல் அளித்து இந்த கூட்டத்தில் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முயற்சி எடுக்கப் படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

;