districts

img

பொதுப்பாதையை மீட்டுத்தரக்கோரி விவசாயிகள் சங்கம் மனு

வேலூர், ஆக 6 - வேலூர் வட்டம் கணியம்பாடி ஊராட்சி கணவாய் மேடு  கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து  வருகின்றனர். இவர்கள் தங்களது வீடுகளுக்கும், விவசாய  விளைநிலங்களுக்கு சென்று வர 200ஆண்டுகால பாரம்பரிய மிக்க கோவிலுக்கு செல்லும் பொதுப்பாதையை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் அந்தப் பாதையை தனிநபர் சுவர் எழுப்பி  ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் 5 கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்த  தனிநபரிடம் பொதுமக்கள் சார்பாக பலமுறை தெரிவித்தும் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை.  எனவே பாதை ஆக்கிரமிப்பை அகற்றி மக்கள் பயன் பாட்டுக்கு மீண்டும் கொண்டு வரக்கோரி வேலூர் வட்டாட்சி யர் முரளிதரனிடம் தாலுகா துணைத்தலைவர் பழனி தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர்.  இந்நிகழ்வில் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர்  சி. எஸ். மகாலிங்கம், மாவட்டச் செயலாளர் கே.சாமிநாதன்,  பொருளாளர் ஜி.நரசிம்மன், மாவட்டக் குழு உறுப்பினர் என்.கன்னியப்பன் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.