ராணிப்பேட்டை, ஜூலை 22 - வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கேட்டு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்களன்று (ஜூலை 22) ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற விவ சாயிகள் வலுக்கட்டாயமான கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் எஸ். கிட்டு தலைமையில் காவல்துறை அதி காரிகளிடம் ஒருவாரம் முன்பே அனுமதி அளித்திருந்த நிலையில் ஆர்ப்பாட்டம் நடத்த முற்பட்டனர். இந்நிலையில் திடீரென அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி காவல்துறை யினர் கெடுபிடிசெய்தனர். இருப்பி னும் சங்கத் தலைவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். தடையை மீறியதாக கூறி விவசாய சங்கத் தலைவர் எஸ். கிட்டு, செயலாளர் எல்.சி. மணி, பொருளாளர் சி. ராதாகிருஷ்ணன், விவ சாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி. ரகுபதி, வேட்டைக் காரன் பழங்குடி சங்க மாநிலத் தலைவர் எம். சேட்டு, விவசாய சங்க மாவட்டக் குழு உறுப்பினர்கள் ரமேஷ், தனபால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கோரிக்கைகள் மான், குரங்கு போன்ற வன விலங்குகளால் விவசாய பாதிப்பை தடுக்க வேண்டும், விவசாயத்தை பாழாக்கும் காட்டுப்பன்றியை கேரள அரசை போல் சுட்டுப் பிடிக்க அனுமதிக்க வேண்டும், மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்ட விவ சாயிகளுக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க வேண்டும், விவசாயிகளுக்கு ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும், விவசாய கடன்கள் முழுமையாக ரத்து செய்ய வேண்டும், பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.