districts

img

நியாயவிலைக் கடைகளில் தரமற்ற அரிசி விவசாயிகள் குற்றச்சாட்டு!

கள்ளக்குறிச்சி,அக்.21 - கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயி கள் குறைதீர்க்கும் நாள்  கூட்டம் உதவி ஆட்சியர் ஆனந்த் குமார் சிங் தலை மையில் நடைபெற்றது.  இதில் கலந்து கொண்ட செந்தில் ராஜன் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாய சங்கத் தலைவர் ஜோதிராமன், ரேசன் கடைகளில் விற்பனை செய்த தரமற்ற அரிசியை ஆதாரத்துடன் காட்டினார். மேலும், இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உதவி ஆட்சியர் தெரிவித் தார்.