விழுப்புரம், மார்ச் 8- கூட்டுறவு வங்கியில் ரூ.7 கோடி மோசடி செய்தவரை உடனே கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சத்தியமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி யில் டெபாசிட் செய்தவர்கள், சேமிப்பு வைத்தவர்களின் நிதி ரு. 7 கோடிக்கு மோசடி நடைபெற்றுள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்தவர்களுக்கும் டெபாசிட், சேமிப்பு பணத்தை திருப்பி வழங்காமல் காலம் கடத்தி வந்தனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட வர்கள் கூறுகையில், “போலியான ஆவணங்கள் மூலம் எங்களை ஏமாற்றி விட்டனர். சேமிப்பில் வைத்திருந்த பணத்தை எடுக்க முடியவில்லை. இதனால் கல்விக் கட்டணம், திரு மணம், மருத்துவம் போன்ற செலவு களுக்கு கடன் வாங்க வேண்டியுள்ளது. மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். இந்த தகவலை அறிந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர்கள், “ கூட்டுறவு வங்கியில் டெபாசிட் செய்தவர்களுக்கு உடடினயாக பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும். மோசடி ஈடுபட்டவர்கள் சொத்தை பறிமுதல் செய்ய வேண்டும். விவசாயிகளின் பெயரில் கடன் வழங்கியதாக பணம் எடுத்து மோசடி யில் ஈடுபட்ட அதிகாரிகள் மீதும் நட வடிக்கை எடுக்க வேண்டும். விவ சாயிகளுக்கு புதிய கடன் வழங்கவும், உரிய நேரத்தில் உரம் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் கோ.மாதவன் தலைமையில் காத்தி ருக்கும் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, சங்க நிர்வாகி களுடன் திண்டிவனம் துணை பதிவாளர் குருசாமி, வங்கி ஆய்வாளர் அமர்நாத் ஆகியோர் பேச்சு நடத்தினர். அப்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு 4 மாதத்திற்குள் பணத்தை திருப்பி அளிப்பதாக எழுத்து மூலம் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேல்மாறன், கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் டி.ஆர்.குண்டு ரெட்டியார், மாவட்டச் செயலாளர் ஆர்.டி.முருகன், விவ சாயிகள் சங்கத்தின் வட்டச் செயலாளர் வி.சிவன், ஆலை மட்ட செயலாளர் டி.சுரேஷ், வட்டக்குழு உறுப்பினர்கள் எம்.மேகராஜ், பி.வெங்கடேசன், பி.தனுசு, பி.எத்திராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.