விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் மீண்டும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை தொடங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் வட்டச் செயலாளர் ஓ.கே.முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் சு.வேல்மாறன், வட்டப் பொருளாளர் எம்.ராமலிங்கம், கே.சுப்பிரமணி, கே.தனஞ்செழியன், பி.தெய்வேந்திரன், சி.அன்பழகன், சிபிஎம் வட்டக்குழு உறுப்பினர் பி.முருகன் வட்டச் செயலாளர் எஸ்.கணபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.