districts

img

விவசாயிகள் போராட்டம் எதிரொலி திருப்போரூர் கோயில் நில விவகார ஏலம் ரத்து

திருப்போரூர், ஆக.07-

     விவசாயிகள் சங்க போராட்டத்தினால் திருப்போரூர் கந்தசாமி கோவில் நிலத்தை ஏலம் விடுவதை ரத்து செய்யப்பட்டது.

    செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சிக்குட்பட்ட கந்த சாமி தேவஸ்தானம் கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்ட அரசுக்கு சொந்தமான  சர்வே எண் 95 ல் சுமார் 17 ஏக்கர் நிலம் மற்றும் சர்வே எண் 110 பி இல் சுமார் 4 ஏக்கர் கிராம நத்தம் நிலத்தில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள்  விவசாயம் செய்து வரு கின்றனர். திருப்போரூர் கிராமத்தில் தனி நபர்களுக்கு சொந்தமான நிலத்திற்கு வரியை வசூல் செய்து அரசுக்கு செலுத்தி கமிஷன் பெற்று ஏஜெண்டாக பணி செய்து வந்த கந்தசாமி கோயில் நிர்வாகம் இனாம் ஒழிப்பு சட்டத்தின் கீழ் நில உரிமையாளர் களுக்கு கிடைக்க வேண்டிய பட்டாவை சட்டத்திற்கு புறம்பாக கோயில் பெயரில் பெற்றுக் கொண்டு திருப்போரூரில் உள்ள அனைவருக்கும் அநீதி இழைத்துள்ளது.

    கந்தசாமி கோவில் நிர்வாகம் தனக்கு சொந்தமில்லாத விவசாய நிலங்களை ஆகஸ்ட் 7, 8 ஆகிய தேதிகளில் ஏலம் விட அறிவிப்பு செய்திருந்தது. இதனால் விவசாயிகள் மற்றும் குடியிருப்போர் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டது. இதனால்  கோவில் நிர்வாகத்தை   கண்டித்தும் நிலத்தை அனுபவித்து வரும் நில உரிமையாளர் களுக்கு ஆவணங்களை சரிபார்த்து பட்டா வழங்கிட வலியுறுத்தியும் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் வி.அரிகிருஷ்ணன் தலை மையில் கோவில் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.  

     கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் துளசி நாரா யணன், மாவட்டச் செயலாளர் வாசு தேவன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ப.சு.பாரதிஅண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சங்கர், வட்டச் செயலாளர் எம்.செல்வம் உள்ளிட்ட பலர் பேசினர்.  

    முன்னதாக கோவில் நிர்வாக செயல் அலு வலர் குமரவேலுவிடம் சங்கத்தின் நிர்வாகி கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதை யடுத்து  ஏலம் விடும் நடவடிக்கையை தற்காலி கமாக  நிறுத்தி வைப்பதாக  கோவில்  நிர்வா கத்தின் சார்பில்  தெரிவிக்கப்பட்டது.