districts

img

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க விவசாயி முயற்சி

விழுப்புரம்,நவ.8- விழுப்புரம் அருகே உள்ள பொய்யபாக்கம் கிரா மத்தைச் சேர்ந்த சர்வேசன், மனைவி விஜயா தேவி உள்ளிட்டு குடும்பத்தில் 7 பேருக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு பக்கத்து நிலம் காவல்துறையில் பணி யாற்றி வரும் காவலர்கள் இரண்டு நபர்களுக்கு சொந்தமானதாகும்.  காவலர்கள் இருவரும் தமது அதிகாரத்தை பயன்படுத்தி சர்வேசன் குடும்பத்திற்கு சொந்த மான நிலத்தை ஆக்கிர மித்து பாதை அமைத்து உள்ளனர். இதுகுறித்து நீதி மன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது. அந்த பாதையை காவலர்கள் பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் கூறியுள்ளது. இதனால் ஆத்திர மடைந்த காவலர்கள், கொலை மிரட்டல் விடுத்த துடன் நிலத்தில் சாகுபடி செய்திருக்கும் பயிர்களை அழித்து வருவதாகவும் இது குறித்து பலமுறை  காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், ஆட்சியர் அலுவலகத்தில் தனது குடும்பத்துடன் மண்ணெண் ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அப்போது, அங்கு பாது காப்பு பணியில் இருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தி விழுப்புரம் தாலுகா காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற் கொண்டனர்.