சென்னை,பிப்.3- ‘ஆயுர்வேதம் மற்றும் ஊட்டச்சத்து அறிவியலுடன் முழுமையான ஆரோக்கியத்தை அடைதல்’ என்ற தலைப்பில் மெய்நிகர் கலந்துரையாடல் வியாழனன்று சென்னை யில் நடைபெற்றது, கலிபோர்னியாவின் பாதாம் போர்டு நடத்திய இந்த நிகழ்ச்சியில் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய ஆலோசகர் ஷீலா கிருஷ்ணஸ்வாமி, ஆயுர்வேத நிபுணர் டாக்டர் விசாகா மஹிந்திரோ, திரைக்கலைஞர் நிஷா கணேஷ் ஆகியோர் உரையாற்றினர், இதனை ஆர்.ஜே.ஸ்ருதி வழிநடத்தினார், ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் சிறந்த ஆரோக்கி யத்தை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை இவர்கள் வலியுறுத்தினர். ஆயுர்வேதம் மற்றும் ஊட்டச்சத்து அறிவியல் உட்பட இந்தியாவில் உள்ள பல்வேறு சுகாதார நடைமுறைகளிலும் உணவு, ஊட்டச்சத்து மற்றும் உண்ணும் முக்கியத்துவத்தைப் பற்றி குழு உறுப்பினர்கள் நீண்ட நேரம் பேசினர். கடந்த பத்தாண்டுகளாக இந்திய உணவுமுறையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது, துரித உணவு மற்றும் பதப்படுத்தப் பட்ட உணவுகளை உட்கொள்வதால் நீண்ட காலத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து நிபுணர்கள் விவாதித்தனர். எனவே இவற்றில் இருந்து மீள தினை, கம்பு. வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள் பாதம் போன்ற ஆரோக்கியம் தரும் பருப்பு வகைகளை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டியது அவசியம் என்றனர்.