சங்கராபுரம், டிச 11 – பட்டா வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்டம் அரசம்பட்டு கிளை சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் அரசம்பட்டு கிரா மத்தில் 2500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் அனைத்து சமூகத்தைச் சார்ந்த 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஒரே வீட்டில் 3,4 குடும்பங்கள் என கடும் இடம் நெருக்கடியில் வசித்து வருகின்றனர். கடந்த 2006 ஆம் ஆண்டு அனைத்து சமூகத்தைச் சேர்ந்த வீடு இல்லாத குடும்பங்களுக்கு மனைப் பட்டா வழங்குவதற்கு என சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியரின் பெயரில் சில ஏக்கர் நிலங்கள் பட்டா பெறப்பட்டு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டா வழங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள் ளது. எனவே உடனடியாக பட்டா வழங்கக்கோரியும், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 60 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட மனை களுக்கு வகை மாற்றம் செய்து இ பட்டா வழங்க கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசம்பட்டு கிளை சார்பில் வட்டாட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளர்கள் கே.சுந்தரம், என்.மூர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட செயலாளர் டி.எம். ஜெய்சங்கர், செயற்குழு உறுப்பினர் எம்.கே.பழனி, ஒன்றிய செயலாளர் எஸ்.சிவாஜி, ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.பிர பாகரன் ஆகியோர் கோரிக் கைகளை விளக்கி பேசி னர். 300க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட ஏராள மானோர் பங்கேற்றனர்.